சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமியை திடீரென மாடுகள் ஆக்ரோஷமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் பள்ளி முடிந்து தனது தாயுடன் சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீதியில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக பசு மாடுகள் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தன. அப்போது, திடீரென அந்த பள்ளி சிறுமியை கொம்பால் முட்டித்துாக்கி வீசியது.
இதனால், அலறித் துடித்த சிறுமியை கீழே வீசி தனது கொம்பால் விடாமல் தாக்கியது. இதைக் கண்டு அலறிய சிறுமியின் தாய் மற்றும் அங்கிருந்தவர்கள் கற்களை வீசி மாடுகளை விரட்ட முயன்றனர். ஆனால், அதனையும் பொருட்படுத்தாத இரு மாடுகளும், கடுமையாக சிறுமியை தாக்குவதை நிறுத்தவில்லை.
பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுமி காயங்களுடன் மீட்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சாலையில் மாடு உள்ளிட்ட விலங்குகள் செல்லும் போது கவனமான செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, தெருவில் அவிழ்த்து விடாமல் தனி இடத்தில் மாட்டு உரிமையாளர்கள் அடைத்து வைக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.