சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமியை திடீரென மாடுகள் ஆக்ரோஷமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் பள்ளி முடிந்து தனது தாயுடன் சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீதியில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக பசு மாடுகள் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தன. அப்போது, திடீரென அந்த பள்ளி சிறுமியை கொம்பால் முட்டித்துாக்கி வீசியது.
இதனால், அலறித் துடித்த சிறுமியை கீழே வீசி தனது கொம்பால் விடாமல் தாக்கியது. இதைக் கண்டு அலறிய சிறுமியின் தாய் மற்றும் அங்கிருந்தவர்கள் கற்களை வீசி மாடுகளை விரட்ட முயன்றனர். ஆனால், அதனையும் பொருட்படுத்தாத இரு மாடுகளும், கடுமையாக சிறுமியை தாக்குவதை நிறுத்தவில்லை.
பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுமி காயங்களுடன் மீட்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சாலையில் மாடு உள்ளிட்ட விலங்குகள் செல்லும் போது கவனமான செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, தெருவில் அவிழ்த்து விடாமல் தனி இடத்தில் மாட்டு உரிமையாளர்கள் அடைத்து வைக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.