சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள தரைப் பாலத்தை கடக்க முயன்ற பசுமாடுகள் வெள்ளநீரில் அடித்துச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது இதனால் மலைப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் காட்டாறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் கடம்பூர் அருகே உள்ள மாக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ள கோம்பையூர், கோம்பை தொட்டி ஆகிய பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக குரும்பூர் பள்ளத்தின் தரைப்பாலம் வெள்ள நீரால் மூழ்கடித்து செல்கிறது.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த தரைப்பாலத்தை சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் கடக்க முற்பட்டபோது நீரின் வேகம் தாக்காமல் சுமார் ஐந்து மாடுகள் வெள்ள நீரில் அடித்து சென்றன.
வெள்ள நீரில் அடித்து சென்ற மாடுகளை காப்பாற்ற முடியாமல் மீதமுள்ள மாடுகளை மட்டும் மாட்டின் உரிமையாளர்கள் பாதுகாப்பாக மறுகரைக்கு ஓட்டி சென்றனர்.
நீண்ட நேரம் ஆகியும் வெள்ள நீரில் அடித்துச் சென்ற மாடுகள் கரை ஒதுங்காததால் மாட்டின் உரிமையாளர்கள் வேதனையுடன் திரும்பி சென்றனர்.
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி…
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
This website uses cookies.