நொறுங்கிப் போன பைக்குகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து ; 2 பேர் பலியான சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 ஆகஸ்ட் 2024, 2:40 மணி
acc
Quick Share

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மகாராஜன்(25). இவர் உடன்குடி அனல்மின் நிலைய திட்டப்பணிகளில் பணிபுரிந்து வருகிறார்.

அதே போல் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் வனம்(25). இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரை அழைத்துக் கொண்டு குலசேகரப்பட்டிணம் பகுதிக்கு மேஸ்திரி வேலைக்கு இன்று காலை சென்றுள்ளார்.

இவர்கள் இருவரது வாகனமும் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் தூக்கி வீசப்பட்டது.
இந்த விபத்தில் மகாராஜன் மற்றும் வனம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வனத்துடன் வந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரப்பட்டிணம் போலீசார் இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மற்றொருவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருசெந்தூர்போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 399

    0

    0