திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மகாராஜன்(25). இவர் உடன்குடி அனல்மின் நிலைய திட்டப்பணிகளில் பணிபுரிந்து வருகிறார்.
அதே போல் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் வனம்(25). இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரை அழைத்துக் கொண்டு குலசேகரப்பட்டிணம் பகுதிக்கு மேஸ்திரி வேலைக்கு இன்று காலை சென்றுள்ளார்.
இவர்கள் இருவரது வாகனமும் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் தூக்கி வீசப்பட்டது.
இந்த விபத்தில் மகாராஜன் மற்றும் வனம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வனத்துடன் வந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரப்பட்டிணம் போலீசார் இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மற்றொருவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருசெந்தூர்போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.