வடசென்னை திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி லோகேஷ்(32). இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.
இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டையில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த லோகேஷை பிரகாஷ் என்பவர் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், தலை கை கால்கள் என படுகாயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், புதுவண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டத்தை சேர்ந்த சொட்டை பிரகாஷ், மதன், திருவொற்றியூர் சாத்து மாநகரை சேர்ந்த சாமியார் கார்த்தி, காசிமேடு அண்ணாநகரை சேர்ந்த தண்டபாணி, சுரேந்தர், பிரகாஷ்ராஜ் ஆகியோரை பழவேற்காட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதில், சொட்டை பிரகாஷ், திருவெற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலத்திலிருந்து தப்பிக்க முயன்றபோது மேலிருந்து கீழே விழுந்ததில், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.