வடசென்னை திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி லோகேஷ்(32). இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.
இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டையில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த லோகேஷை பிரகாஷ் என்பவர் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், தலை கை கால்கள் என படுகாயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், புதுவண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டத்தை சேர்ந்த சொட்டை பிரகாஷ், மதன், திருவொற்றியூர் சாத்து மாநகரை சேர்ந்த சாமியார் கார்த்தி, காசிமேடு அண்ணாநகரை சேர்ந்த தண்டபாணி, சுரேந்தர், பிரகாஷ்ராஜ் ஆகியோரை பழவேற்காட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதில், சொட்டை பிரகாஷ், திருவெற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலத்திலிருந்து தப்பிக்க முயன்றபோது மேலிருந்து கீழே விழுந்ததில், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…
தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: கடந்த மார்ச்…
விளைநிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மிரட்டல் விடுத்ததாக பிரபல ரவுடி படப்பை குணா கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம்:…
ரெட்ரோ பட விவகாரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "கங்குவா" படம் எதிர்பார்த்த அளவில்…
This website uses cookies.