வடசென்னை திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி லோகேஷ்(32). இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.
இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டையில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த லோகேஷை பிரகாஷ் என்பவர் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், தலை கை கால்கள் என படுகாயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், புதுவண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டத்தை சேர்ந்த சொட்டை பிரகாஷ், மதன், திருவொற்றியூர் சாத்து மாநகரை சேர்ந்த சாமியார் கார்த்தி, காசிமேடு அண்ணாநகரை சேர்ந்த தண்டபாணி, சுரேந்தர், பிரகாஷ்ராஜ் ஆகியோரை பழவேற்காட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதில், சொட்டை பிரகாஷ், திருவெற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலத்திலிருந்து தப்பிக்க முயன்றபோது மேலிருந்து கீழே விழுந்ததில், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.