ரூ.30,000 கந்துவட்டி கடன் வாங்கிய இளைஞருக்கு நெருக்கடி.. வீட்டு பத்திரத்தை எடுத்து சென்றதால் விபரீத முடிவு.. தவிக்கும் குடும்பம்!
திருவாரூர் அருகே பெரும்புகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் தினேஷ்குமார் ( 30 ). இவர் திருவாரூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்கிற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர் .
இவர் ரமேஷ் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாகவும் அதற்கு பல மடங்கு வட்டி செலுத்தியும் தினேஷ்குமாரின் இரண்டு இருசக்கர வாகனத்தை பறித்து சென்றதாகவும் வீட்டின் பத்திரத்தை பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மணமுடைந்த தினேஷ்குமார் கடந்த எட்டாம் தேதி இரவு வீட்டிலிருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து நன்னிலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த தினேஷ்குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்த ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…
கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…
This website uses cookies.