கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் 67 பேர் உயிரிழந்த நிலையில் இவ்விவகாரத்தில் தமிழ போலீசாரும், புதுச்சேரி போலீசாரும் மேற்கொண்ட விசாரணை குறித்து தமிழ் பத்திரிக்கை நாளிதழில் வெளிவந்த செய்தியை பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூரியா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதே போன்று விஷ சாராய விற்பனை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வந்ததால் பதிவிடப்படும் செய்தியின் உண்மை நிலை அறிந்து பதிவிட்டப்பட்டிருக்கிறாரா என்பது குறித்து விசாரனை செய்ய பாஜக எஸ் ஜி சூரியாவிற்கு விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த சம்மன் நேற்றைய தினம் பெறப்பட்ட நிலையில் இன்று விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூரியா நேரில் ஆஜராகினார்.
ஆஜராகியதை தொடர்ந்து சிபிசிஐடி,ஏடி, எஸ்பி, எஸ்.ஜி சூரியாவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு பேட்டியளித்த எஸ் ஜி சூரியா கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் நாளிதழில் வந்த செய்தியை பதிவிட்டதற்காக சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளும் சிபிசிஐடி போலீசார் இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்கட்சி பாஜகவை சார்ந்தவர் என்பதால் தனக்கு சம்மன் அனுப்பட்டு விசாரணை செய்வதாகவும் இந்த விசாரனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.