கோவை – மேட்டுப்பாளையம் அருகே மொக்கை மேடு பகுதியில் வாழை தோட்டத்தில் நுழைந்த முதலையை வனத்துறையினர் 3 மணிநேரம் போராடி பிடித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மொக்கை மேடு பகுதியில் தமிழ் செல்வன் என்பவரது விவசாய தோட்டத்தில் முதலை ஒன்று வந்தது. இது குறித்து தகவலின் பேரில் சிறுமுகை வனத்துறையினர், அங்கு வந்து முதலையை சுருக்கு கயிறு கட்டி பிடிக்க முயன்றனர்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் போராடி அந்த முதலையை இலாவகமாக வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட முதலையை கயிறுகளால் கட்டி தோழில் சுமந்து வந்து வாகனத்தில் ஏற்றினர்.
மீட்கப்பட்ட முதலையை பவானி சாகர் அணை பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் வாகனத்தில் எடுத்து சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…
மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…
This website uses cookies.