காத்து வாங்கிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்.. தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!!
நாளை மறுதினம் பொங்கல் பண்டிகை வர உள்ளதால், தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
தற்போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான தேவையான வசதிகள் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த பேருந்துநிலையத்தில் இன்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்க சிஇஓ நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையரக இணை இயக்குநர் பார்த்தீபன் பேருந்து நிலைய சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் என்ன? பேருந்துகள் முறையாக இயக்கப்படுகிறதா? வசதிகள் உள்ளதா உள்ளிட் பணிகளை புதியதாக நியமனம் செய்யப்பட்ட சிஇஓ மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
This website uses cookies.