தமிழகம்

வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அடுத்த பாலையம்பட்டி புளியம்பட்டி நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் துரைமுருகன் (40). இவர், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி ராமலட்சுமி, தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

இந்த நிலையில், துரைமுருகன் கடந்த மார்ச் 5ஆம் தேதி வீட்டில், உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில், துரைமுருகன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, போலீசார் தீவிர விசாரணையைத் துவங்கி உள்ளனர். இதில், துரைமுருகன் அமரர் ஊர்தியில் பணிபுரிந்தபோது நீண்ட நாட்களாக ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்துள்ளார்.இதனை அறிந்த மனைவி ராமலட்சுமி, அவரைக் கண்டித்துள்ளார். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் துரைமுருகன் அந்தப் பெண்ணிடம் தொடர்பில் இருந்துள்ளார்.

இதனால் கணவரை வெறுப்பேற்றுவதற்காக ராமலட்சுமி, தனது உறவினரான சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் வீரராக உள்ள விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த ஜெயகணேஷ் (35) என்பரிடம் தொடர்பில் இருப்பது போல, அடிக்கடி வீடியோ கால் பேசியுள்ளார். இந்த பிரச்னையில் ஜெயகணேஷை தொடர்பு கொண்ட துரைமுருகன், அவரது குடும்பத்தினரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க: சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!

இதனால் ஆத்திரமடைந்த ஜெயகணேஷ், விடுமுறையில் வந்து, கடந்த 5ஆம் தேதி துரைமுருகன் வீட்டிற்குச் சென்று அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அருப்புக்கோட்டை டவுன் போலீசார் ஜெயகணேஷை நேற்று கைது செய்தனர்.

Hariharasudhan R

Recent Posts

சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!

டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…

2 hours ago

முதலில் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. அடுத்து ED சொல்கிறது.. செந்தில் பாலாஜி அட்டாக் பேச்சு!

ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…

3 hours ago

நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!

நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…

3 hours ago

பில்டப் காட்டி சீன் போட்ட நயன்தாரா.. பதிலடி கொடுத்த 90களின் கனவுக்கன்னி!

நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…

4 hours ago

கத்தியை காட்டி மிரட்டி 19 வயது மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்.. தந்தையின் சபல புத்தி..!!

ஓட்டப்பிடாரம் பகுதியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதையும் படியுங்க…

5 hours ago

தாக்கு பிடிக்குமா திமுக? பாஜகவின் மதுபான ஊழல் கருவி கைகொடுக்குமா?

மதுபான ஊழல் புகாரை அமலாக்கத்துறை ஆளும் திமுக அரசு மீது வைத்துள்ள நிலையில், இது 2026 தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை…

6 hours ago

This website uses cookies.