சேலம் உடையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் தமிழ்ச்செல்வன் (23). இவருக்கும் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தஇளம் பெண்ணுக்கும் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
ஆடி மாதத்தில் புது பெண் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். பெண்ணின் உறவினர் ஒருவர் புதுப்பெண்ணின் தொலைபேசியை பார்த்த போது ஆபாச குறுஞ்செய்தி வந்துள்ளது.
இது குறித்து பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் கேட்டபோது பெண் அளித்த தகவல் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண்ணின் கணவர் தமிழ்ச்செல்வன் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் (இன்ஸ்டாகிராம்) வெளியிட்டு பல ஆண்களிடம் விலை பேசி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து உறவினர்களுக்கு தெரிய வந்ததை எடுத்து அப்பெண் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் தமிழ்ச்செல்வன், மற்றும் பாலியல் தொந்தரவு கொடுத்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த நடராஜ் (42) ஆகிய இருவர் மீது பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், தகவல் தொழிற்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ஆத்தூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் அதில் உள்ள வீடியோக்களை ஆய்வு செய்தால் இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மனைவியை பார்க்கச் சென்ற போது தன்னை தாக்கியதாக தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் நகர போலீசார், பெண்ணின் பெற்றோர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.