Categories: தமிழகம்

சைக்கோ கொலைகாரன் நடமாட்டம்?…இருவேறு இடங்களில் நிகழ்ந்த கொடூர கொலை: போலீசார் தீவிர விசாரணை..!!

புதுச்சேரியில் இருவேரு இடங்களில் நடைபெற்ற கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட புதுச்சேரி – கடலூர் எல்லையான கன்னிக்கோயிலில் ஒருவரும், இதே காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நரம்பையில் ஒருவரும் என இரண்டு பேர் விடியற்காலை கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து நரம்பை பகுதிக்கு சென்ற கிருமாம்பாக்கம் போலீசார் கொலை செய்யப்பட்டு இருந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர் தமிழக பகுதியான ஜெயங்கொண்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் என்பது தெரியவந்தது.

மற்றொருவர் புதுச்சேரியில் தங்கி கொத்தனாராக பணியாற்றி வந்ததாகவும், இவர் மது அருந்தி கொண்டிருந்த போது மர்ம நபர் யாரோ இவரை கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஒடியது தெரியவந்துள்ளது.

இதேபோல் புதுச்சேரி – கடலூர் எல்லையான கன்னியகோயில் பகுதியில் 55 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தலையில் நசுங்கி இறந்து கிடப்பதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று போலிசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அடையாளம் கான முடியாத ஆண் நபரை யாரோ சிமெண்ட் சிலாப்பை எடுத்து அவரின் தலையில் போட்டு கொலை செய்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியில் சுற்றி திறந்த மன நலம் பாதிக்கப்பட்ட மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஒரே காவல் நிலைய சரகத்திர்குல் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் கிருமாம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

6 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

6 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

7 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

7 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

7 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

8 hours ago

This website uses cookies.