கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் சொந்த கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திமுக மேயர் பாதியில் வெளியேறிய நிலையில், கவுன்சிலர்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மேயர் கூறிய நிலையில், அடுத்தடுத்து கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
குறிப்பாக, கடலூர் சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பாமக கவுன்சிலர் சரவணன் நீண்ட நேரம் பேசினார். இதனால், அதிருப்தியடைந்த மற்ற கவுன்சிலர்கள் நாங்களும் பேச வேண்டும், ஒருவர் மட்டும் நீண்ட நேரம் பேசினால் எப்படி என கூறி கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனிடையே, கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்ததில் இருந்து மாநகராட்சி பகுதியில் கவுன்சிலர்களை யாரும் மதிப்பதில்லை என மேயரிடம் முறையிட்டனர். மேயர் கவுன்சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாமன்ற கூட்டத்தை விட்டு பாதியிலேயே மேயர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக, பாமக, திமுக கவுன்சிலர்கள் மேயரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.