பெண் என்பதால் புறக்கணிப்பா? கொதிக்கும் திமுக மேயர்.. தொடரும் உட்கட்சி பூசல்!

Author: Hariharasudhan
21 March 2025, 11:57 am

பெண் என்பதால் தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கின்றனரா என கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர்: 2021ஆம் ஆண்டில் மாநகராட்​சியாக தரம் உயர்த்​தப்பட்ட கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இதில் 31 வார்டுகள் திமுக, 5 திமுக கூட்டணிக் கட்சிகள் வைத்துள்ளன. மேலும், 2022இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்​.கே.பன்​னீர்​செல்வத்தின் ஆதரவுடன் சுந்தரி ராஜா என்பவர் மேயர் ஆனார்.

ஆனால், இவரை எதிர்த்து கடலூர் திமுக எம்எல்​ஏ கோ.ஐயப்​பனின் ஆதரவாளரான கீதா குணசேகரன் போட்டியிட்டு தோற்றார். இருப்பினும், திமுக கோஷ்டி பூசல் அடங்கவில்லை என்றே தெரிகிறது. இந்த நிலையில், மஞ்சக்​குப்பம் மைதானத்தில் ரூ.2.24 கோடி மதிப்​பீட்டில் புதிய கடைகள் கட்டு​வதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி கடந்த மாரச் 10ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்​சிக்கு மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்​செல்வன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் கடுப்பான மேயர் சுந்தரி ராஜா, “மாநக​ராட்சித் திட்டத்​துக்கு அடிக்கல் நாட்டு விழா நடப்பதாக அதிகாரிகள் சொன்னதால்தான் நான் வந்தேன்.

Cuddalore DMK

என்னை வரச்சொல்லி​விட்டு அதிகாரிகள் யாரும் வரவில்​லையா?” என அங்கிருந்த ஒப்பந்​த​தா​ரரிடம் சூடாக கேள்வி எழுப்​பி​னார். பின்னர், எல்லாம் முடிந்த பிறகு மாநகராட்சி உதவிப் பொறியாளர் பாரதி உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்தனர்.

அப்போது, அவர்களைப் பார்த்து, “மாநக​ராட்சி சார்பில் திட்டப் பணிகளை தொடங்கி வைப்ப​தற்காக குறிப்​பிட்ட நேரத்தை தெரிவிக்​கிறீர்கள். நீங்கள் சொன்ன நேரத்​துக்கு நான் இடத்து​க்கு வந்தால் எந்த அதிகாரியும் வருவதில்லை. பெண் மேயர் என்பதால் நான் கலந்து​கொள்ளும் நிகழ்ச்​சிகளைப் புறக்​கணிக்​கிறீர்​களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலை ஏன் போராட வேண்டும்.. ஒன்னும் இல்லாம போயிடும்.. சீமான் கடும் தாக்கு!

இந்த நிலையில், இது குறித்து மேயர் சுந்தரி ராஜா பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “மாநக​ராட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்​சிகளுக்கு அதிகாரிகள் எந்த நேரத்தைக் குறிப்​பிட்டுச் சொல்கி​றார்களோ, அந்த நேரத்​துக்கு நான் தவறாமல் சென்று விடுகிறேன். ஆனால், அதிகாரிகள் அந்த நேரத்​துக்கு வருவதில்லை, தாமதமாகவே வருகி​றார்கள்.

இதுவரை 5 நிகழ்ச்​சிகளில் அதிகாரிகள் இப்படி நடந்துள்ளனர். மக்கள் பணிகள் தொய்வின்றி நடக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக உள்ளேன். ஆனால், அதிகாரிகள் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது வேதனையாக இருக்​கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

  • Manoj Bharathiraja dared to commit suicide.. Wife saved him தற்கொலை செய்ய துணிந்த மனோஜ்.. காப்பாற்றிய மனைவி : 8 வருடமாக பட்ட கஷ்டம்!
  • Leave a Reply