தமிழகம்

பெண் என்பதால் புறக்கணிப்பா? கொதிக்கும் திமுக மேயர்.. தொடரும் உட்கட்சி பூசல்!

பெண் என்பதால் தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கின்றனரா என கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர்: 2021ஆம் ஆண்டில் மாநகராட்​சியாக தரம் உயர்த்​தப்பட்ட கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இதில் 31 வார்டுகள் திமுக, 5 திமுக கூட்டணிக் கட்சிகள் வைத்துள்ளன. மேலும், 2022இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்​.கே.பன்​னீர்​செல்வத்தின் ஆதரவுடன் சுந்தரி ராஜா என்பவர் மேயர் ஆனார்.

ஆனால், இவரை எதிர்த்து கடலூர் திமுக எம்எல்​ஏ கோ.ஐயப்​பனின் ஆதரவாளரான கீதா குணசேகரன் போட்டியிட்டு தோற்றார். இருப்பினும், திமுக கோஷ்டி பூசல் அடங்கவில்லை என்றே தெரிகிறது. இந்த நிலையில், மஞ்சக்​குப்பம் மைதானத்தில் ரூ.2.24 கோடி மதிப்​பீட்டில் புதிய கடைகள் கட்டு​வதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி கடந்த மாரச் 10ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்​சிக்கு மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்​செல்வன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் கடுப்பான மேயர் சுந்தரி ராஜா, “மாநக​ராட்சித் திட்டத்​துக்கு அடிக்கல் நாட்டு விழா நடப்பதாக அதிகாரிகள் சொன்னதால்தான் நான் வந்தேன்.

என்னை வரச்சொல்லி​விட்டு அதிகாரிகள் யாரும் வரவில்​லையா?” என அங்கிருந்த ஒப்பந்​த​தா​ரரிடம் சூடாக கேள்வி எழுப்​பி​னார். பின்னர், எல்லாம் முடிந்த பிறகு மாநகராட்சி உதவிப் பொறியாளர் பாரதி உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்தனர்.

அப்போது, அவர்களைப் பார்த்து, “மாநக​ராட்சி சார்பில் திட்டப் பணிகளை தொடங்கி வைப்ப​தற்காக குறிப்​பிட்ட நேரத்தை தெரிவிக்​கிறீர்கள். நீங்கள் சொன்ன நேரத்​துக்கு நான் இடத்து​க்கு வந்தால் எந்த அதிகாரியும் வருவதில்லை. பெண் மேயர் என்பதால் நான் கலந்து​கொள்ளும் நிகழ்ச்​சிகளைப் புறக்​கணிக்​கிறீர்​களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலை ஏன் போராட வேண்டும்.. ஒன்னும் இல்லாம போயிடும்.. சீமான் கடும் தாக்கு!

இந்த நிலையில், இது குறித்து மேயர் சுந்தரி ராஜா பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “மாநக​ராட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்​சிகளுக்கு அதிகாரிகள் எந்த நேரத்தைக் குறிப்​பிட்டுச் சொல்கி​றார்களோ, அந்த நேரத்​துக்கு நான் தவறாமல் சென்று விடுகிறேன். ஆனால், அதிகாரிகள் அந்த நேரத்​துக்கு வருவதில்லை, தாமதமாகவே வருகி​றார்கள்.

இதுவரை 5 நிகழ்ச்​சிகளில் அதிகாரிகள் இப்படி நடந்துள்ளனர். மக்கள் பணிகள் தொய்வின்றி நடக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக உள்ளேன். ஆனால், அதிகாரிகள் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது வேதனையாக இருக்​கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

நீ யாரு..என்ன கேள்வி கேட்க..செய்தியாளர்களை கடிந்து கொண்ட சல்மான் கான்.!

31 வயது வித்தியாசம் – சல்மான் கானின் பதில் என்ன? பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் தமிழ்,தெலுங்கு…

45 minutes ago

ஜனநாயகன் படத்துக்கு பிரச்சனையா? விஜய் அரசியலால் புது சிக்கல்!

விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். ஹெச் வினோத் இயக்கத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன்,…

55 minutes ago

20 ஆண்டுகளுக்கு முன்பு ரவுடியை காதல் திருமணம் செய்த பெண் போலீஸ்.. ஒரே நொடியில் விபரீத முடிவு!

சென்னையில், ரவுடிசத்தில் ஈடுபட்டு வந்த கணவரால் விரக்தி அடைந்த பெண் தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை: சென்னை…

2 hours ago

பாமகவுக்கு ஒரு ரூல்ஸ்.. திமுகவுக்கு ஒரு ரூல்ஸ்? மாணவர்கள் மீது திமுக துண்டை போட்டு ஆடிய கவுன்சிலர்!(வீடியோ)

தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் அரசு நடுநிலைப்ப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு…

3 hours ago

செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தாரா? குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக எம்எல்ஏக்கள்.. பேரவையில் நடந்தது என்ன?

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து எதிர்கட்சித் தலைவர் திமுக சிவா உள்பட திமுகவினர் வெளியேற்றப்பட்ட பின்னணி குறித்து பார்க்கலாம். புதுச்சேரி: புதுச்சேரி…

3 hours ago

This website uses cookies.