கடலூர் : சிதம்பரம் அரசு காமராஜர் அரசு மருத்துவமனையில் குடிபோதையில் இருந்த நபர் தையல் போடுவதற்கு லஞ்சம் கேட்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது அரசு காமராஜர் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் மருத்துவமனைக்கு வந்து செல்வது வழக்கம்.
நேற்று இரவு கோவிந்தசாமி தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவரது தாயார் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்பு தலையில் தையல் போட சொன்னதாக தெரிகிறது. மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் செய்யக்கூடிய பணிகளை அங்கு பணிபுரியும் சாதாரண ஊழியரை மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு தையல் போட சொல்வது தொடர்ந்து பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு பணிபுரியும் ஊழியர் மணிமாறன் என்பவர் நேற்று கட்டு கட்டும் இடத்தில் மது போதையில் இருந்துள்ளார். அப்போது கார்த்திக் அவரது தாயாரை அழைத்து சென்று உள்ளார். மது போதையில் இருந்த ஊழியர் மணிமாறன் 200 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்திக், எதற்கு அரசு மருத்துவமனைக்கு நாங்கள் வருகிறோம், எதற்காக நாங்கள் தையல் போடுவதற்கு லஞ்சம் தர வேண்டும்..?, ஏன் 200 ரூபாய் கேட்டீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் கடுப்பான அந்த ஊழியர், வைத்தியம் பார்க்க வேண்டுமா..? வேண்டாமா என்று மதுபோதையில் மணிமாறன் பேசும் காட்சியும், 200 ரூபாய் இல்லையென்றால் 5000 ரூபாய் கொடு என்று அலப்பறை செய்த காட்சியையும் கார்த்திக் அவரது செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனிடைய, ஊழியர் மதுபோதையில் ரகளை செய்வதை பார்த்துக் கொண்டிருந்த பெண் போலீஸ்காரர் ஒருவர், வீடியோ எடுத்த கார்த்திக்கை தாக்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளது. இது தற்போது அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.