கடலூர் அருகே ஆசிரியரின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தேங்காய் பறிக்கும் பொழுது அருந்த மின் கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி ஜடிஜ மாணவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் அரசு வயது (17). இவர் பண்ருட்டி சக்தி ஐடிஐயில் முதலாமாண்டு எலக்ட்ரீசியன் படித்து வருகிறார். அந்த சக்தி ஐடிஐயில் எலக்ட்ரீசியன் ஆசிரியராக பணிபுரியும் பிரபாகரன் என்பவர், இவரது மனைவிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று வளைய காப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்காக, தாம்பூல பைக்கு தேவையான தேங்காயை தயார் செய்வதற்காக, மாமனார் வீடான ஒறையூருக்கு ஐடிஐ வகுப்பு மாணவர்கள் அரசு மற்றும் ஆதி ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு ஆசிரியர் பிரபாகரன் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை சென்றுள்ளனர்.
அங்கு ஆதி பறித்த தேங்காயை அரசு எடுத்துக் கொண்டிருந்தபோது, அருந்த மின் கம்பி கையில் பிடித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஐடிஐ மாணவன் அரசு உடலை புதுப்பேட்டை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பண்ருட்டி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்து உடலை உறவினர்களுக்கு தெரியாமல் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்த சென்ற நிலையில், தகவல் அறிந்த உயிரிழந்த மாணவன் உறவினர்கள் எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி உடலை முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்ப முடியும் என்று ஆவேசம் அடைந்து ஆம்புலன்ஸில் இருந்து உடலை தூக்கிக்கொண்டு கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பண்ருட்டி இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு உடலை மீண்டும் பண்ருட்டி பிணவரையில் வைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.