தமிழகம்

திமுக கவுன்சிலர் மீது காரித்துப்பிய திமுக செயலாளர்.. கடலூர் கூட்டத்தில் பரபரப்பு!

கடலூர் அருகே, திமுக கவுன்சிலர் மீது திமுக நகர்மன்ற துணைத் தலைவர் காரித்துப்பிய சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

கடலூர்: சட்டசபையில் சட்டை கிழியத் தான் செய்யும், சண்டை வரத்தான் செய்யும் என்றும், அங்குள்ள சேர், பெஞ்ச் ஆகியவை உடைக்கப்படும் என்றும் நாம் பல சினிமாக்களிலும், ஏன், சில நேரங்களில் நிஜ வாழ்க்கையிலும் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம்.

ஆனால், இங்கு உறுப்பினர் மீது காரித்துப்பிய சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், முக்கியமாக, ஆளும் திமுக நகர்மன்ற துணைத் தலைவரே, திமுக கவுன்சிலர் மீது காரித் துப்பியதால் இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது எதற்காக நடந்தது? எங்கு நடந்தது என்பதை பார்க்கலாம்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில், இன்று வழக்கம்போல் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக நகர்மன்றத் தலைவர் வெண்ணிலா, துணைத் தலைவர் பரமகுரு, கவுன்சிலர்கள் அதிகாரிகள் என பலரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டமும் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 13வது வார்டு திமுக கவுன்சிலர் தனபால், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும், நகராட்சியில் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினார்.

திமுக கவுன்சிலரே முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டியதால், அதே திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற துணைத் தலைவரும், திமுக நகரச் செயலாளருமான பரமகுரு, கவுன்சிலர் தனபால் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது ஒருகட்டத்தில் ஒருமை பேச்சு வரை சென்றதால், உறுப்பினர்க முக சுழிப்பு அடைந்தனர்.

இதையும் படிங்க: மனைவி, ரிசப்ஷனிஸ்ட் உடன் சேர்ந்து ரூ.17 லட்சம் அபேஸ்.. பாஜக பிரமுகரின் மோசடி வெளியானது எப்படி?

மேலும், ஒருபடி மேலே சென்ற திமுக நகர்மன்ற துணைத் தலைவர் பரமகுரு, திமுக கவுன்சிலர் தனபால் மீது காரித் துப்பியதால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத சக கவுன்சிலர்கள், இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சமாதானம் செய்ய முறபட்டனர். இறுதியில், இருவரையும் சமாதானப்படுத்தினர். இவ்வாறு பெண் நகர்மன்றத் தலைவர் உள்பட பல பெண் உறுப்பினர்கள் இருந்த அரசு மேடையில், ஆளும் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும், அநாகரீகப் பேச்சுகள் மட்டுமின்றி, காரித் துப்பிய நிகழ்வு அரசியல் மேடையில் பேசுபொருளாகியுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

துரோகம் செய்த ஐபிஎல்..அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்..வார்னர் எடுத்த முடிவு .!

பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…

7 hours ago

பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…

8 hours ago

தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…

8 hours ago

அதிர்ச்சி…! அண்ணாமலைக்கு எதிராக வழக்குப்பதிவு : ஆக்ஷன் எடுக்கும் சைபர் கிரைம்!

அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

9 hours ago

ஐபிஎல் ரசிகர்களே உஷார்.!நூதன முறையில் பணத்தை திருடும் மர்ம கும்பல்.!

சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…

10 hours ago

விஜய் சார் படத்தோட போட்டி போட எனக்கு தகுதி இல்ல : வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…

10 hours ago

This website uses cookies.