கடலூரில் தவறான சிகிச்சையால் பெண்ணின் கைவிரல் அழுகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டியை அடுத்துள்ள திராசு பகுதியைச் சேர்ந்தவர் குப்பு. இவருக்கு கடந்த மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, நரம்பு ஊசி செலுத்துவதற்காக அவரது வலது கையில் துளைக்கருவி பயன்படுத்தப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய சில தினங்களில் அவரது வலது கையின் விரல்கள் அழுகின. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், மீண்டும் மருத்துவர்களை சந்தித்து கேட்டுள்ளார். இதனை பார்த்த மருத்துவர்கள் தானாக சரியாகி விடும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், அச்சமடைந்த குப்பு மற்றும் அவரது உறவினர்கள், கை விரல்கள் அழுகியது குறித்து புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அப்போது, கையில் குத்தப்பட்ட துளைக்கருவியினால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, சென்னையில் தவறான சிகிச்சையினால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில், கடலூரில் பெண் ஒருவருக்கு தவறான சிகிச்சை அளித்துள்ள சம்பவம் மருத்துவத்துறை மீதான நம்பிக்கைத் தன்மையை இழக்கச் செய்வதாக அமைந்துள்ளது. எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.