அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒசூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் ரகசியமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து நல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி, ஆவலப்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்
அப்போது கெலவரப்பள்ளி கிராமத்திற்கு அருகே மிளகாய் தோட்டத்தை ஒட்டிய அரசு புறம்போக்கு நிலத்தில் புற்கள், புதர்கள் வளர்ந்த பகுதியில் ரகசியமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு வளர்க்கப்பட்ட 5 கஞ்சா செடிகளை பிடுங்கி அகற்றினர். போலீசாரின் விசாரணையில் கெலவரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் (48) என்பவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா செடிகளை உரமிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது
அதனைதொடர்ந்து முனிராஜை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.