மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆட்டுக்குளம் விளக்கில் மேலூர் – சிவகங்கை சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் கேக் வைத்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் சாலையை மறித்து இடையூறு செய்யலாமா என்று கேட்கும் முதியவரை மாணவர் ஒருவர் முகத்தில் ஸ்பிரே அடித்து அவமரியாதை செய்கிறார்.
வீடியோ வைரலானதை தொடர்ந்து மேலூர் டிஎஸ்பி ஆர்லிஸ் ரெபோனி அந்த மாணவர்களை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்தார்.
அதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் ஆட்டுக்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் கல்லூரி மாணவர் சிவணி (19) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவரையும் கைது செய்தனர்.
இவர்கள் மீது சாலையின் குறுக்கே தடுப்பு அமைத்து வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், முதியவர்களை அவமரியாதை செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிரதான சாலையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.