மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆட்டுக்குளம் விளக்கில் மேலூர் – சிவகங்கை சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் கேக் வைத்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் சாலையை மறித்து இடையூறு செய்யலாமா என்று கேட்கும் முதியவரை மாணவர் ஒருவர் முகத்தில் ஸ்பிரே அடித்து அவமரியாதை செய்கிறார்.
வீடியோ வைரலானதை தொடர்ந்து மேலூர் டிஎஸ்பி ஆர்லிஸ் ரெபோனி அந்த மாணவர்களை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்தார்.
அதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் ஆட்டுக்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் கல்லூரி மாணவர் சிவணி (19) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவரையும் கைது செய்தனர்.
இவர்கள் மீது சாலையின் குறுக்கே தடுப்பு அமைத்து வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், முதியவர்களை அவமரியாதை செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிரதான சாலையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.