திண்டுக்கல் ; ‘டீச்சர், அவன் ஊசி போட்ட இடத்தை தொடுறான் என ஒன்றாம் வகுப்பு மாணவன் மழலை குரலில் ஆசிரியையிடம் புகார் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இன்று சுகாதாரத் துறையின் சார்பாக தடுப்பூசி போடப்பட்டது.
அப்போது, தடுப்பூசி போட்ட ஒன்றாம் வகுப்பு மாணவன் திருக்குமரன் என்ற சிறுவன் ” டீச்சர்.. அவன் ஊசி போட்ட இடத்தில் தொட்டுட்டே இருக்கான், எனக்கு வலிக்குது. ஊசி போட்ட எல்லார் கையையும் அவன் தொட்டுட்டே இருக்கான்,” என்று மழலை கொஞ்சும் குரலில் புகார் செய்தான்.
மேலும் “டீச்சர் நீங்க இரவு சாப்பிட சொல்லி கொடுத்த மாத்திரையை, அவன் இப்பவே வாய்க்குள்ள போடுறான்” என்று ஆசிரியையிடம் கோள் மூட்டினான். திருக்குமரன் மழலை குரலில் பேசி ஆசிரியையிடம் புகார் செய்யும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வைரலாகும் செல்வராகவனின் இன்ஸ்டா வீடியோ நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் பயங்கர ஹிட் அடித்து வசூல்…
சைந்தவிக்கு எப்போதும் நல்ல மனசுங்க இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் ஜி வி பிரகாஷ்,இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் 'கிங்ஸ்டன்'…
நடிகர் பாண்டியன் இறப்பின் கொடூர பின்னணி தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பாண்டியன்,இவர்…
சென்னையில் பிரபல சினிமா பட இயக்குநருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர். ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ்…
இயக்குனராகும் டைட்டானிக் பட ஹீரோயின் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கிய திரைப்படம் டைட்டானிக். ஒரு கப்பலில்…
நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில்…
This website uses cookies.