அதிமுக மாநிலங்களவை எம்பி சி.வி.சண்முகம் தான் அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.
விழுப்புரம்: கடந்த மூன்று ஆண்டுகளாக சமூக வலைத்தளங்கள் மூலம் தனக்கு கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் கூறியிருந்தார்.
மேலும், இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில், இன்று (அக்.25) காலை விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சி.வி.சண்முகம் வந்தார்.
ஆனால், அவர் வந்த நேரத்தில் அங்கு எஸ்பி இல்லை. இருப்பினும், அவருக்காக பார்வையாளர்கள் அறையில் அவர் காத்திருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் எஸ்பியைச் சந்திக்க முடியாமல் போனதால், சரியாக பிற்பகல் 12 மணியளவில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் நுழைவாயில் முன்பு திடீரென சி.வி.சண்முகம் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் சிறிது பரபரப்பு நிலவியது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிகவின் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் நான் கலந்துகொள்ளப் போவதாகவும், அதுகுறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ சேனலில் செய்தி வெளியானதாகவும் ஒரு தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. ஆனால், இது முழுக்க முழுக்க பொய்யான தகவல்.
திட்டமிட்டே எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரப்பப்பட்ட பொய்ச் செய்தி அது. எனவே தான், இதற்கு சேனல் தரப்பிலும் மறுப்புச் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தேன்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து : “Technical Fault” என முட்டுக்கொடுப்பது ஏன்? வானதி சீனிவாசன் அதிரடி!
அது மட்டுமல்லாமல், கடந்த நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேரங்களிலும் இதுபோல எனக்கு எதிராக அவதூறு பரப்பினர். எனவே, இது தொடர்பாக திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை தொடர்ந்து 23 புகார்கள் அளித்துள்ளேன். ஆனால், எந்தப் புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
என் மீது இந்த அரசு வழக்குப் பதிவு செய்வதில் மட்டுமே காட்டும் முனைப்பை, நான் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் காட்டுவதில்லை. அதேநேரம், நான் எஸ்பியைச் சந்திக்க முன்கூட்டியே அனுமதி வாங்கி இருந்தாலும், அவர் திட்டமிட்டு என்னைச் சந்திக்காமல் தவிர்த்துள்ளார்” எனக் குற்றம் சாட்டினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.