கோவை: சுல்தான் பேட்டையை அடுத்த பணப்பட்டி பொன்னாங்காணி பகுதியில் தலித் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகேட்டு முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை பொன்னாங்காணி என்ற பகுதியில் ராமு என்ற தாழ்த்தப்பட்ட நபர் மீது 20க்கும் மேற்பட்ட ஆதிக்க ஜாதியினர், கடந்த 7ஆம் தேதி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், படுகாயமடைந்த ராமு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து அவருக்கு அளிக்கக் பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது ஜாதிய வன்மத்தை விதைப்பதாக கூறி முற்போக்கு அமைப்பினர் ஒன்றுகூடி, சாதிவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் 20 பேரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று தாழ்த்தபட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் இணைந்து இன்று அரசு மருத்துவமனை முன்பாக கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கங்களை சார்ந்தவர்கள், இறந்தவரின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.