தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கூலி வேலைக்காக சென்ற பட்டியலின பெண்களுக்கு தேங்காய் ஓட்டில் தேநீர் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த போளையம்பள்ளி கிராமத்தில் இருந்து ஐந்து பட்டியலின வகுப்பைச் சார்ந்த பெண்கள், மாரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.
அப்போது, வேலை செய்த பெண்களுக்கு தோட்டத்தின் உரிமையாளர்கள் தேங்காய் ஓட்டில் தேநீர் கொடுத்ததாகவும், தோட்டத்தின் உரிமையாளருக்கு மட்டும் சில்வர் டம்ளரில் தேநீர் குடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதைக் கண்ட ஒரு நபர், காலம் எங்கோ சென்றிருக்கிறது, இன்னும் சாதிய வன்மமா..? அவர்களுக்கும் வேறு ஏதாவது டம்ளரில் கொடுத்திருந்தால் பரவாயில்லை. ஆனால் தேங்காய் ஓட்டில் தேநீர் கொடுத்து இருப்பது தவறு இது கண்டிக்கத்தக்கது என அந்த தோட்டத்தின் பெண் உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.
இந்த நிகழ்வால் அப்பகுதியில் ஒரு பேசும் பொருளாக உள்ள நிலையில் இது போன்ற செயல்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் தொடர்ந்து செய்து வருவதாகவும், அவர்களுக்கு சாதி பாகுபாடில்லாமல் அனைவரும் ஒற்றுமை என்ற நோக்கத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.