கோவை : காரமடையில் ரயில்வே நிர்வாகத்தின் அறைகுறை வேலையால் சாலையில் விழுந்த வாகன ஓட்டிகள் பல பேர் தவறி விழும் சம்பவம் அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டம் காரமடையில் கடந்த ஒரு வாரமாக ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அதன் ஒரு பகுதியாக ரயில்வே இருப்பு பாதைகளில் உள்ள தன்டவாளங்கள் மாற்றி அமைக்க காரமடை தோலம்பாளையம் ரயில்வே
கேட்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
பராமரிப்பு பணி நடைப்பெற்ற இந்த ரயில்வே கேட்டினை கடந்து சென்றால் தான் மருதூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, தேக்கம் பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல முடியும் என்பதால் இந்த பாதை எப்போதும் அதிக அளவிலான வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ரயில்வே கேட்டில் தண்டாவளத்தின் அடிப்பகுதியில் வாகனங்கள் சிரமம் இன்றி செல்ல வசதியாக கற்கள் பதிக்கும் பணியும் நடைபெற்றது. இருப்பினும் அப்பணிகளை சரிவர மேற்கொள்ளாமல் அரையும் குறையுமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் நேற்று இரவு காரமடை தோலம்பாளையம் ரயில்வே கேட்டினை கடந்து செல்ல முயன்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர்.
குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனங்கள் கடந்து செல்ல சரியான முறையில் கற்களை பதிக்காமல் அரையும் குறையுமாக பணிகள் நடந்ததால் 10க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பாதையை கடக்க முயன்று விபத்தில் சிக்கிர்.
நான்கு சக்கர வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. எனவே பராமரிப்பு பணிகளை முறையாக செய்து விபத்துகளை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.