Categories: தமிழகம்

முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமியார், மாமனாரை கொன்ற மருமகள்… போலீசாரின் அலட்சியம்!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த, மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலங்கையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேல்முருகன்.

இவர் விருத்தாச்சலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, பூமாலை என்பவரின் மகள் கீதா-33 என்பவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கீதாவுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள புதுகுப்பம் பகுதியை சேர்ந்த, வெங்கடேசன் என்பவரின் மகன் ஹரிஹரன் என்பவருடன், கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளத் தொடர்பு பற்றி, கீதாவின் மாமியார் கொளஞ்சி மற்றும் மாமனார் சுப்பிரமணியனுக்கும் தெரிய வந்ததால், மருமகள் கீதாவை கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கீதா கடந்த 29.12.2021 ஆம் தேதி, தனது கணவரின் சொந்த ஊரான இலங்கியனூர் ஊருக்கு சென்று, கணவர் வேல்முருகன் மற்றும் மாமியார் கொளஞ்சி மாமனார் சுப்பிரமணியன் ஆகியோருக்கு முள்ளங்கி சாம்பாரில்,எலி பேஸ்ட் விஷத்தினை கலந்து கொடுத்துள்ளார்.

அப்போது விஷ சாம்பாரை சாப்பிட்ட மாமியார் கொளஞ்சி, மாமனார் சுப்பிரமணியன், பக்கத்து வீட்டு பையன் பிரபு என்பவரின் 10 வயது மகன், நித்தீஸ்வரன் ஆகிய மூவருக்கும் அடுத்தடுத்து உடல் நலவு குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி, அடுத்தடுத்து மூவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆறாம் தேதி, கீதாவின் கணவர் வேல்முருகன், மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் வழக்கு பதிந்த மங்கலம்பேட்டை காவல் துறையினர், எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வந்த நிலையில், 1 1/2 வருடம் கழித்து, சாம்பாரில் விஷம் வைத்து, மாமியார், மாமனார் மற்றும் பக்கத்து வீட்டு பையனை கொன்ற கீதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹரிஹரனை இன்று காலை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

நிர்வாக திறனற்ற திமுக அரசின் கையாலாகாத காவல்துறை, சிறுவன் உட்பட, மூன்று நபரை, விஷம் வைத்துக் கொன்ற ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியின் மகளை, 1 1/2 வருடம் கழித்து கைது செய்து இருப்பது என்பது, காவல்துறையின் அலட்சியப்போக்கை வெட்ட வெளிச்சமாக காட்டுவதாக, பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…

38 minutes ago

உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…

அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…

57 minutes ago

அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…

1 hour ago

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

16 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

17 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

17 hours ago

This website uses cookies.