அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகள் உயிரிழப்பு… மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது!!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன். இவரது மகன் சசிமோகன், இவர் காரிமங்கலம் கெரகோட அள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது மனைவி பூர்ணிமா வயது 30 , கடந்த 18 ஆம்தேதி அன்று வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீரென பூர்ணிமா மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் அவர் அணிந்திருந்த ஆடை மீது, பூஜை அறையில் இருந்த விளக்கில் இருந்து தீப்பற்றிக்கொண்டது. இதை பார்த்து அதிர்ச் சியடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டனர்.
பின்னர், தீக்காயம் அடைந்த அவரை காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து அங்கு அவருக்கு கடந்த 8 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றி இன்று உயிரிழந்தார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.