பெங்களூர்: காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர் பாபுவின் மகள் தந்தையிடம் இருந்து பாதுகாக்க கோரி போலீஸ் நிலையத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான பி.கே.சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனக்கும் தனது கணவர் சதீஷ்குமாருக்கும் பாதுகாப்பு கோரி காவல்துறையை அணுகியுள்ளார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் திங்கள்கிழமை தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகினார்.
அவர் போலீஸ் கமிஷனர் கமல் பந்த்திடம் ஒரு மனு கொடுத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரின் மகள் ஜெயகல்யாணி, தான் சதீஷ்குமாரை கடந்த 6 ஆண்டுகளாக காதலிப்பதாகவும் தனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.
சதீஷ்குமார் மீதான எனது காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அவரை திருமணம் செய்ய முயன்றபோது, போலீசார் அவரை கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்து இரண்டு மாதங்கள் காவலில் வைத்திருந்தனர் என்று அவர் கூறினார். இதற்கு பின்னால் என் தந்தையின் பங்கு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்.
நான் 18 வயதுக்கு மேல் உள்ள பெண். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்று ஜெயகல்யாணி கூறினார். மேலும், தமிழகம் திரும்பினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், எனவே பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகியுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் தனக்கு யாரும் உதவ மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.