கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் விவசாயிகளின் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்துவதாக கூறி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவராயபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மேற்கு தொடர்ச்சிமலையொட்டிய தேவராயபுரம், நரசிபுரம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக 10 க்கு மேற்பட்ட யானைகள் தொடர்ந்து இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வில்லை எனக்கூறியும் ,அதேபோல் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து செய்யாததைக் கண்டித்தும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் விவசாயிகள் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
This website uses cookies.