ரத்தக்கறையோடு ஆற்றில் மிதந்து வந்த சடலங்கள்.. ஒரு பக்கம் தாய்.. மறுபக்கம் மகன் : பகீர் கிளப்பிய சம்பவம்!
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த தொட்டம்பட்டி கிராமத்தின் அருகே தூக்கிட்ட நிலையில் சுமார் 46 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத பெண்ணும், சுமார் 22 வயது மதிக்க தக்க ஆணும், ஆற்று நீரில் சட்டலமா இருப்பதாக மொரப்பூர் காவல் நிலையத்திற்கு தொட்டம்பட்டி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் மொரப்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இருவரும் தாய், மகன் என்று காவல்துறையினரால் சொல்லப்படுகிறது. மேலும், இவர்கள் இருவரும் மாற்று திறனாளிகள் என்பதும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
தூக்கில் தொங்கிய படி தாயும், தலை மற்றும் முகத்தில் ரத்த வெள்ளத்துடன் மகனுக்கும் மர்மமான முறையில் இறந்து கிட்டந்துள்ளனர். இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை.
இறந்தவர்களின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் மகனை கொலை செய்து ஆற்றில் வீசி சென்றார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருவரின் இறப்பு இப்பகுதி மக்களிடயே பெரும் பயத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
This website uses cookies.