தருமபுரி அடுத்த அதியமான் கோட்டை அருகே புதிதாக அமையுள்ள சிப்காட் பகுதியான வெத்தலகாரன் பள்ளம் செங்காளம்மன் கோவில்
அருகே இன்று அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமும், 50 வயது மதிப்பு தக்க பெண் ஆகிய 2 பேரின் உடல்கள் காயங்களுடன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தன.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து. உடனே அதியமான் கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு பிணமாக கிடந்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் ஏதும் உடனே காவல்துறையினருக்கு தெரியவில்லை.
மேலும், 2 பேரையும் மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு 2 நாட்கள் கழித்து பிணங்களை இங்கே கொண்டு வந்து போட்டு உள்ளனர்.
இதனால் 2 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் உள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்தநிலையில் இறந்து போன 2 பேரின் உடல்களையும் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு பிரேதத்தை சோதனை செய்தனர்.
மேலும் படிக்க: நிர்வாண போட்டோ எடுத்து ₹2 கோடி கேட்டு மிரட்டி நடிகையுடன் உல்லாசம்… கைதாகும் பிரபல யூடியூபர்?
தருமபுரி மாவட்டத்தில் மாயமானவர்களின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த 2பேரையும் அடித்து கொன்றுவிட்டு உடல்களை இந்த பகுதியில் வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் பல்வேறு கொலை கொள்ளை திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.