கோவை : அனைகட்டி அடுத்த தமிழக கேரள எல்லையில் மலையில் இருந்து தவறி விழுந்து பெண் யானை பலியான சம்பவம் இயற்கை ஆர்வலரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த கேரள பகுதியான அட்டப்பாடி, அகலி, சைலெண்ட் வேலி பகுதியில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்த யானைகள் உணவிற்காகவும் வலசை செல்லவும் தமிழக- கேரள வனப்பகுதிக்குள் மாறி மாறி வருவது வழக்கம். இந்நிலையில் அட்டப்பாடி உள்ள மலை பகுதி வழியாக யானை கூட்டம் ஒன்று நேற்று இரவு வந்துள்ளது.
அப்போது மலையின் விளிம்பில் யானை கூட்டம் சென்றபோது கால் தவறி பெண் யானை ஒன்று மலை பாதையில் விழுந்தது. இதனால் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அட்டப்பாடி வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து இன்று காலை அங்கு சென்று வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மேலும் வேறு ஏதாவது யானை இதை போன்று தவறி விழுந்து உள்ளதா எனவும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மலைப்பாதையில் யானை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.