விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டகுப்பம் ஈ.சி.ஆர் சாலையில் பைக்கில் வந்த தனியார் மருத்துவமனை காவலாளி மாட்டின் மீது மோதி உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சின்ன கோட்டக்குப்பம் சமரசம் நகர் சுனாமி குடியிருப்பை வசித்து வந்தவர் முஹம்மது சுலைமான் (44), தனியார் மருத்துவமனை காவலாளியாக வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் முஹம்மது சுலைமான் நேற்று இரவு வீட்டிலிருந்து பைக்கில்
மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சின்ன கோட்டக்குப்பம் புதுச்சேரி- சென்னை ஈ.சி.ஆர் சாலையில் சென்றபோது சாலையில் குறுக்கே வந்த மாடு மீது சுலைமான் வாகனம் மோதியது.
இதில் சுலைமான் தூக்கி வீசப்பட்டு சாலை ஓரத்தில் இருந்த வாய்க்காலில் விழுந்தார். அவரை வீட்டு பக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதுகுறித்து, கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.