ஒட்டப்பிடாரம் உலகண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று மாலையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
அப்போது ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு சுதேசன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். மேலும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தின் போது மாட்டு வண்டியின் பின்னால் காவல் ஆய்வாளரின் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மகன் பேச்சிமுத்து (வயது 35) திருநெல்வேலி நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வரும் இவர் இருசக்கர வாகனத்தில் தெற்குபரும்பூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது காவல் ஆய்வாளரின் வாகனத்திற்கு முன்னால் சென்று மாட்டின் முதுகில் கம்பியால் குத்தியதாக கூறப்படுகிறது .
அப்போது காவல் ஆய்வாளர் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரேஸ் நடத்திய விழா கமிட்டியினரும் சத்தம் போட்டு உள்ளனர்.
தொடர்ந்து கேட்காமல் கம்பியால் மாட்டை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் காவல் ஆய்வாளர் மீண்டும் சத்தம் போட்டு உள்ளார்
அப்போது வக்கீல் பேச்சிமுத்து, காவல் ஆய்வாளர் சுதேசனை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது . இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பேச்சி முத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.