சாணார்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றிய வி.ஏ.ஒவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட சாணார்பட்டி அருகே உள்ளது மார்க்கம்பட்டி கிராமம். இங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் வாய்க்கால் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக வி.ஏ.ஒ க்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் உதவியோடு ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதையடுத்து வி.ஏ.ஒ அலுவலகத்திற்கு வந்த மார்க்கம்பட்டியை சேர்ந்த திருப்பதி, செல்வம், மூர்த்தி ஆகிய மூன்றுபேரும் எப்படி ஆக்கிரமிப்பை எடுத்தீர்கள், இதனால் உங்கள் தலையை வெட்டிவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த மிரட்டல் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவாகி வைரலாகியுள்ளது. இதையடுத்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வி.ஏ.ஒ கோபாலகிருஷ்ணன் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.