திமுக ஊராட்சி மன்ற தலைவர். திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உட்பட ஏழு பேருக்கு கொலை மிரட்டல். திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஜம்புதுரை கோட்டை ஊராட்சி மன்றம் இயங்கி வருகிறது .12 வார்டுகளைக் கொண்ட ஜம்புதுரை ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த பவுன்தாயி காட்டு ராஜா.
இவர் துணைத்தலைவர் சிவராமனின் டிஜிட்டல் கார்டு மூலம் ஒரு கோடி 50 லட்சம் ரூபாய் நிதியை கையாடல் பண்ணி விட்டதாக கூறி கடந்த திங்கள்கிழமை அன்று ஜம்பு துறை கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவருடன் சேர்ந்து வந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது குறித்து மனு அளித்தார்.
மனுவை விசாரித்த வருவாய் அதிகாரி உடனடியாக துணைத்தலைவருக்கு சேர வேண்டிய டிஜிட்டல் கார்டை ஒப்படைக்கும் படி உத்தரவு பிறப்பித்த நிலையில் கடந்த 17ஆம் தேதி டிஜிட்டல் கார்டு துணைத் தலைவர் சிவராமனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பவுன் தாய் அவரது கணவர் காட்டு ராஜா மற்றும் ஊராட்சி செயலர் ஆகிய மூவரும் தொலைபேசி வாயிலாகவும் நேரடியாகவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட திமுக துணைத்தலைவர் சிவராமன் உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்களையும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் ஜாதிய மோதலை ஏற்படுத்தும் விதத்தில் பேசி வருவதாகவும் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சியில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உட்பட ஏழு பேர் மீது கொலை மிரட்டல் விடுவதும் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் ஊழல் செய்துள்ளதும் தற்போது நிலக்கோட்டை தொகுதி ஜம்பு துறை கோட்டை ஊராட்சி முழுவதும் பெறும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஊழல் செய்து கொலை மிரட்டல் விடுக்கும் ஜம்புதுரை கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பவுன் தாய் மற்றும் அவரது கணவர் காட்டு ராஜா ஊராட்சி செயலர் மீது அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.