தமிழகம்

போலீஸ் ஸ்டேஷன் அருகே அழுகிய நிலையில் சடலம்.. சொகுசு காரில் நடந்தது என்ன?

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையல் அருகே காரில் இருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள ராஜகோபால் தெரு பகுதியில், விலை உயர்ந்த (BMW) கார் ஒன்று நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து உள்ளது. இந்த நிலையில், இந்த காரில் இன்று (டிச.2) அதிகாலை துர்நாற்றம் வீசி உள்ளது.

இதனால், அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்களில் சிலர், காரில் இருந்து துர்நாற்றம் அதிக அளவில் வருவதைக் கண்டு, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உள்ளனர். இந்த தவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வளசரவாக்கம் போலீசார், காரை திறந்து பார்த்தனர்.

அப்போது, காரினுள் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்து உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து, காருக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சடலம் கண்டெடுக்கப்பட்ட கார் புதுச்சேரி பதிவு எண் கொண்டது என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அந்தக் கார் எப்போது இருந்து அங்கு நின்றது? உயிரிழந்த நபர் மதுபோதையில் உள்ளே படுத்திருந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து உள்ளே வீசிவிட்டுச் சென்றார்களா என்ற பல்வேறு கோணங்களில் வளசரவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மருத்துவ மாணவியின் உயிரை பறித்த புரோட்டா : கோவையில் சோகம்!

அதேநேரம், மீட்கப்பட்ட நபர் உயிரிழந்து 10 நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

12 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

12 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

13 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

15 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

16 hours ago

This website uses cookies.