Categories: தமிழகம்

விவசாய கிணற்றில் விழுந்த புள்ளி மான்: பொதுமக்கள் உதவியுடன் உயிருடன் மீட்ட வனத்துறையினர்..!!

செங்கம் அருகே வனப்பகுதியிலிருந்து குடிநீர் தேடிவந்து விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்டு காட்டிற்குள் விட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீதாண்டப்பட்டு பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான்கள் மற்றும் காட்டுவிலங்குள் ஏராளமாக உள்ளது. வனப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகளுக்கு காட்டில் குடிநீர் இல்லாமல் அடிக்கடி அருகில் உள்ள ஊருக்குள் தண்ணீர் தேடிவருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் தீதாண்டப்பட்டு வனப்பகுதியில் இருந்து இன்று புள்ளிமான் ஒன்று குடிநீர் தேடி அருகில் உள்ள சந்திரன் என்பவரது விவசாய கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்துள்ளது. இதனை கண்ட விவசாயி மற்றும் ஊர் பொதுமக்கள் செங்கம் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த செங்கம் தீ அணைப்பு மற்றும் மீட்பு துறையினர் கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்த புள்ளிமானை உயிரிடும் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். வனப்பகுதியில் உள்ள காட்டு விலங்களுக்கு குடிநீருக்காக காட்டில் தொட்டி அமைத்து ஊருக்குள் வராமல் தடுத்து காட்டுவிலங்குகளின் உயிரிழப்பினை தடுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

10 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

10 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

11 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

11 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

11 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

12 hours ago

This website uses cookies.