Categories: தமிழகம்

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்கு : இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்…!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி என்பவர் மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக கடந்த நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகா காந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டி இருந்தார். எனவே நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய்சேதுபதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத், “பெங்களூரில் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு விசாரிக்க முடியாது. கோர்ட்டுக்கு அதிகாரமே கிடையாது. எந்திரத்தனமாக இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று நீதிபதி சம்மன் அனுப்பியுள்ளார்.

சட்டத்தை மகாகாந்தி தவறாக பயன்படுத்தியுள்ளார். பெங்களூர் போலீசில் ஒன்றும் நடக்கவில்லை என்று எழுதி கொடுத்து விட்டு, அதை மறைத்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார். மகாகாந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சம்பவம் பெங்களூரில் நடந்தாலும், உடல் காயம் குறித்து சென்னையில் மகாகாந்தி சிகிச்சை பெற்றுள்ளார். அதனால் இங்கு வழக்கு தொடர முடியும்” என்று வாதிட்டார். அப்போது, “பெங்களூரு போலீசில் ஒன்றும் நடக்கவில்லை என்று புகார்தாரர் எழுதி கொடுத்தாரா?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு வழக்கறிஞர், “பெங்களூரு போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்தது. அதனால் அவ்வாறு எழுதி கொடுக்கப்பட்டது” என்றார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, “கட்டப்பஞ்சாயத்து நடந்திருந்தால், அதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தீர்களா?”என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர், புகார் கொடுக்க வில்லை என்றார். இதையடுத்து, விஜய் சேதுபதி மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கிறேன். இந்த மனு மீதான இறுதி விசாரணைக்காக வருகிற மார்ச் 3-ந்தேதிக்கு விசாரணையை தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

KavinKumar

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

1 day ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

1 day ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

1 day ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

1 day ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

1 day ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

1 day ago

This website uses cookies.