Categories: தமிழகம்

திருப்பம் கொடுத்த டெல்லி பசுமை தீர்ப்பாயம்.. இனி வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி?!

திருப்பம் கொடுத்த டெல்லி பசுமை தீர்ப்பாயம்.. இனிவெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி?!

கோவை மாநகராட்சிக்கு சொந்தமாக வெள்ளலுாரில், 650 ஏக்கர் பரப்பளவில் கழிவுநீர் பண்ணை உள்ளது. இதில், 150 ஏக்கரில் கழிவு கொட்டப்பட்டு திடக்கழிவு மேலாண்மை செய்யப்படுகிறது.

மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும், 1,250 டன் வரையிலான குப்பை இங்கு பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டதால், மலை போல் தேங்கியுள்ளது.

இதனால் துர்நாற்றம், ஈ தொல்லை போன்ற சுகாதார சீர்கேடு பிரச்னைகளை, சுற்றுப்பகுதி மக்கள் சந்திக்கின்றனர். இப்பிரச்னை, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வரை சென்று விசாரணையும் நடந்துவருகிறது.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி பணியாளர்கள், 10 நாட்களுக்கும் மேலாக இரவு, பகலாக போராடி தீயை அணைத்தனர். புகை மூட்டத்தால் சுற்றுப்பகுதியில், காற்று மாசடைந்தது.

அப்போது, பத்திரிகைகளில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு, டில்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு வழக்கை மாற்றி அமைத்துள்ளது.

இதில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், கோவை மாநகராட்சி கமிஷனர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய, நான்கு வாரம் அவகாசம் கோரியுள்ளனர்.

இவர்கள் நான்கு பேரிடம் இருந்தும் மே 28ம் தேதி சென்னை, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளலுார் குப்பை கிடங்கால் துர்நாற்றம், சுற்றுப்பகுதிகளில் வசிக்கமுடியாத சூழல் ஆகிய பிரச்னைகளை முன்வைத்து, குறிச்சி-வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதுதொடர்பான விசாரணையும், மே 28ம் தேதி நடப்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

4 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

5 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

5 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

6 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

6 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

6 hours ago

This website uses cookies.