பாஜக ஆட்சியில் ஜனநாயகம் ரொம்ப வேகமாக இறந்து வருகிறது.. திமுக கூட்டணி கட்சி கடும் விமர்சனம்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி சார்பாக, முதல்வரின் நிவராண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளோம்.
பாஜக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம், பல்வேறு வகையான பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டுள்ளார்கள். தற்போது நாடாளுமன்றத்திற்கு இருவர் அத்துமீறி நுழைந்துள்ளனர். பிரதமர் மோடி அவர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் பாதுகாப்பு வசதியுடன் கட்டப்பட்டது என சொல்லி வந்தார்.
ஆனால், எந்தவிதமான பாதுகாப்பு வசதியும் புதிய நாடாளுமன்றத்தில் இல்லை என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாகும். நாட்டு மக்களுக்கே பாதுகாப்பு தருவதற்கு பாஜக தலைமையிலான அரசு தகுதியில்லை, திறமையில்லை, திராணியில்லை என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டு.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைவு ஏற்பட்டதை குறித்து உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதற்காக அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். ஆனால், ஜனநாயகம் பாஜக ஆட்சியில் வேகமாக இறந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.