Categories: தமிழகம்

இந்து முன்னணி மாநில தலைவருக்கு அனுமதி மறுப்பு… மனு கொடுக்க வந்த போது அலுவலக கதவுகள் அடைப்பு.. திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறு குறு வியாபாரிகள் பூ, வடை, டீ, பழங்கள் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுகுறு வியாபாரிகள் கோவில் வளாகத்தில் விற்பனை செய்ய அனுமதி மறுத்து இணை ஆணையர் அவர்களை வெளியேற்றினார். இதனைத் தொடர்ந்து சிறுகுறி வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுகுறு வியாபாரிகளுக்கு ஆதரவாக இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் இன்று கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் மனு கொடுக்க வந்தார்.

அப்போது கோவில் இணை ஆணையரின் உத்தரவின் பேரில் கோவில் காவலாளிகள் அலுவலக வாயில் கதவுகளை பூட்டினார். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் வாயில் கதவுகளை தள்ளிவிட்டு உள்ளே சென்று கோவில் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவில் இணை ஆணையர் கார்த்திக் கோவில் அலுவலகத்திற்குள் வருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என பேசியதால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது . இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

1 hour ago

வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!

சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…

2 hours ago

’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!

சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…

2 hours ago

மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?

நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…

3 hours ago

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

4 hours ago

This website uses cookies.