தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறு குறு வியாபாரிகள் பூ, வடை, டீ, பழங்கள் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுகுறு வியாபாரிகள் கோவில் வளாகத்தில் விற்பனை செய்ய அனுமதி மறுத்து இணை ஆணையர் அவர்களை வெளியேற்றினார். இதனைத் தொடர்ந்து சிறுகுறி வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுகுறு வியாபாரிகளுக்கு ஆதரவாக இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் இன்று கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் மனு கொடுக்க வந்தார்.
அப்போது கோவில் இணை ஆணையரின் உத்தரவின் பேரில் கோவில் காவலாளிகள் அலுவலக வாயில் கதவுகளை பூட்டினார். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் வாயில் கதவுகளை தள்ளிவிட்டு உள்ளே சென்று கோவில் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவில் இணை ஆணையர் கார்த்திக் கோவில் அலுவலகத்திற்குள் வருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என பேசியதால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது . இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.