சேலம் ஓமலூரில் உள்ள ஆதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் முன்னால் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நாகப்பட்டினம் பாங்கல் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் நேதாஜி உள்ளிட்ட 160 பேர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ஏழை எளிய தொழிலாளர்கள் குறைந்த விலையில் சுவையான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மா உணவகம் தமிழ்நாடு முழுவதும் மலிவு விலையில் உணவு அருந்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட அம்மா உணவகம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சரியான முறையில் செயல்படவில்லை. தரமான பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால் தரமான உணவு தயாரித்து ஏழை எளியவருக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அதன் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளனர்.
சென்னையில் 47 மையம் செயல்பட்டு வந்தது திமுக பொறுப்பேற்ற பிறகு 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளது நேற்று முதலமைச்சர் அம்மா உணவகத்தில் ஆய்வு செய்து சோதனை செய்தார். அந்த சோதனையை மூன்றாண்டு காலம் ஏன் செய்யவில்லை. இந்த திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு அம்மா உணவகத்தை சரியான முறையில் நிர்வகிக்கவில்லை. அம்மா உணவகத்தின் மீது அக்கறை இருந்தால் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் ஆட்சியாளர்கள் ஆய்வு செய்திருக்க வேண்டும். இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு தற்போது இந்த ஆய்வு நடைபெற்று இருக்கிறது. அம்மா உணவகத்தின் மீது அரசு கவனம் செலுத்தாத காரணத்தினால் ஏழை எளிய மக்கள் சரியான உணவு கிடைக்காததால் இந்த ஆட்சியாளர்கள் மீது ஏழை எளிய தொழிலாளர்கள் வெறுப்பில் உள்ளனர். இதனை அறிந்த பிறகு தமிழக முதல்வர் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 200 நாட்களில் 500க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தமிழகம் கொலை நகரமாக மாறி உள்ளது வேதனைக்குரியது. காவல்துறைக்கு சுதந்திரம் வழங்கப்படாத காரணத்தினால் இத்தகைய விளைவு ஏற்பட்டுள்ளது.
கஞ்சா போதையில் ஏற்படும் கொலைகள் அதிகம் கஞ்சா விற்பனை செய்யாத இடங்களே இல்லை பள்ளி கல்லூரி அருகில் கூட கஞ்சா பழக்கம் அதிகரித்து உள்ளது. அனைத்து கல்லூரி பகுதிகளிலும் ஆய்வு செய்து கஞ்சா விற்பவர்களை கண்டுபிடித்து சட்டரீதியாக தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த முடியும் இல்லையென்றால் மாணவர்கள் சீரழிந்து விடுவார்கள் என்றார்.
ஏற்கனவே நீக்கப்பட்டவர்களின் குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி கேட்க வேண்டாம் என்று ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டவரின் கருத்துக்கு பதில்.
எப்போதுமே அதிமுகவை குறி வைத்து அனைத்து ஊடகங்களும் விவாத மேடை வைப்பதில் என்ன பயன் இருக்கிறது. மக்களுக்கு இதனால் என்ன பயன் என்ற கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஊழல் தொடர்பான தகவல்களை தொலைக்காட்சிகள் விவாதம் செய்ய வேண்டும்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தானாக முன்வந்து சரணடைந்த நபர் திட்டமிட்டு என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை கையில் விலங்கு அணியாமல் அழைத்துச் சென்றது ஏன் போன்ற பல்வேறு சந்தேகங்கள் இந்த வழக்கில் ஏற்பட்டுள்ளது.
அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனைகள் நடத்தி வருகிறோம்.
திமுக குடும்ப கட்சியாக ஆட்சியும் நடத்தி வருகிறது. துணை முதல்வர் பதவி ஸ்டாலினின் மகனுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல. திமுகவில் எத்தனையோ மூத்த முன்னோடிகள் உள்ளனர். அவர்களுக்கு ஏன் துணை முதல்வர் பதவி வழங்க முன்வரக்கூடாது என்றார்.
கள்ள சாராய மரணங்களுக்கு பிறகு இந்த அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கள்ளச்சார விவகாரம் தொடர்பாக வெறும் அறிக்கை மட்டுமே வெளி வருகிறது. ஆனால் அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்
அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அரசின் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, ஏன் குப்பைக்கு கூட வரி விதித்து உள்ளதை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
தமிழ்நாடு முழுவதும் திட்டங்களை துவக்கி வைக்க தமிழக முதல்வர் பல மாவட்டத்திற்கு பயணம் செய்தார். ஆனால் அந்த மாவட்டத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பதில் எந்தத் திட்டமிடுதலும் இல்லை. அதற்கான அறிவிப்புகளும் இல்லை இதுவரை அதிமுக ஏற்கனவே நடத்திய திட்டங்களை தான் திமுக அரசு திறந்து வைத்து வருகிறது.
தமிழ்நாட்டின் கடன் உயர்ந்து கொண்டே செல்கிறது. 3 லட்சத்தி 65 ஆயிரம் கோடி இதுவரை கடன் பெற்றுள்ளனர். இந்த அரசு கடனில் தான் செயல்பட்டு வருகிறது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.