விழுப்புரத்தில் நடைபெற்ற வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றாத தமிழக அரசை கண்டித்து விழுப்புரத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பாமகவினர் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் ஆர்ப்பாட்ட மேடைக்கு வருவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு உணவு சாப்பிடுவதற்காக அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.
பாமகவினர் ராமதாசை காண உள்ள நுழைய முற்பட்டனர். அப்போது காவல்துறையினர் இரும்பு கதவுகளை அடைத்து அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டபோது காவல்துறையினருக்கும் பாமகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படியுங்க: வருங்கால முதலமைச்சர் விஜய்.. பெரியாருக்கு மரியாதை செலுத்தும் போது தவெக கோஷம்!!
உடனே பாமகவினர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடு முயன்றனர். அப்போது ஒரு சிலர் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் படத்தை கிழித்ததால் மேலும் பதற்றம் நீடித்தது.
பின்னர் காவல்துறையினர் பாமக தொண்டர்களை சமாதானம் செய்து பாமக ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போஸ்டரை கிழித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.