எனது சாவி கீழே விழுந்ததால் குனிந்து எடுத்தேன் அவர்களை தாக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பாஜகவின் பின்புலத்தில் தன் மீது பொய் புகார் அளிக்கின்றனர். என துணைமேயர் நாகராஜன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மூதாட்டி அளித்த புகார் தொடர்பாக துணைமேயர் பேட்டி அளித்துள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காக தூண்டுதலின் பெயரில் தவறான புகார்களை அளித்துவருகின்றனர். நான் கம்யூனிஸ்ட் கொள்கை சித்தாந்தத்தோடு பணியாற்றி வருகிறேன். சிசிடிவியில், உள்ள வீடியோவில் சம்பவம் நடைபெற்ற நாளன்று தனது சகோதரனின் மீது முருகானந்தம் எச்சில் துப்பியதால் அது குறித்து கேட்பதற்காக நான் சென்றேன்.
நான் அவர்களை ஜாதிய ரீதியாகவும் பேசவில்லை அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கவில்லை பொய்யான குற்றச்சாட்டை வைக்கின்றனர். மேலும், நான் கல்லை எடுத்து எரியவில்லை எனவும், நான் அங்கு சென்றபோது சாவி கீழே விழுந்தது. அதனை எடுப்பதற்காகவே கீழே குனிந்தேன். அதனை அவர்கள் தவறாக சித்தரித்து கூறுகிறார்கள் எனவும், தொடர்ச்சியாக முருகானந்தம் தனது கட்சி கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து எச்சிலை துப்பி கொண்டே இருந்ததால் பல முறை கூறியும் கேட்காமல் எச்சில் துப்பிவந்தார்.
சம்பவ நாளன்று தம்பி மீது எச்சிலை துப்பியது குறித்து கேட்கசென்றபோது என்னை ஆபாசமாக பேசினார். இது தொடர்பாக, ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது முருகானந்தம் நேரடியாக வந்து இனிமேல் இதுபோன்று எச்சிலை துப்பமாட்டேன் என எழுதி கொடுத்து வந்தார்.
ஆனால், இப்போது மீண்டும் தன் மீது அவதூறு பரப்புவதற்காக பாஜகவின் பின்புலத்தோடு புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே, தன் மீது பொய் புகார் அளித்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்து உள்ளேன். எனவே, அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே என் மீது இதுபோன்று பொய்யான புகார்கள் அளிக்கப்படுவதாகவும் அளித்தார்.
எனக்கும் கோழிக்குமாருக்கும் தொடர்பு இல்லை தவறாக புகார் அளிக்கிறார்கள் ஏற்கனவே என் மீது இது போன்று வேறொரு பிரச்சனையை கொண்டுவந்தவர்களே மீண்டும் பின்புலமாக இருந்து தூண்டிவிடுகின்றனர் என்றார். சில நாட்களுக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் காரை நிறுத்தியதற்கே முருகானந்தம் ஆபாசமாக பேசினார் எனவும் தெரிவித்தார்.
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.