சேலம் மாவட்டம்ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டது.
இந்த சிலைக்கு ஆண்டுதோறும் எம்ஜிஆரின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் எம்ஜிஆர் சிலை மீது சாணியை பூசி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன், ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் அதிமுகவினர் திரளானோர் அப்பகுதியில் ஒன்று கூடி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஆத்தூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எம்ஜிஆர் சிலையை அவமதித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.