அனுவாவி மலைக்கோவிலுக்கு இனி பக்தர்கள் சுலபமாக செல்லலாம் : அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
கோவை மாவட்டம் பெரியதடாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற அனுவாவி சுப்பிரமணிய சாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ரோப் கார் சேவை அமைப்பது குறித்து தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தனது மனைவியுடன் வருகை தந்திருந்த அமைச்சர் சேகர்பாபு, சுப்பிரமணிய சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி முதியவர்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு கோவில்களில் ரோப் கார் மற்றும் தானியங்கி லிப்ட் வசதி செய்து தரப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அந்த வகையில் அனுவாவி மலைக்கோவிலில் 460 மீட்டர் தொலைவிற்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் ரோப் கார் வசதி அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே கரூர் அய்யர்மலை, சோளிங்கர் கோவில்களில் ரோப் கார் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், தொடர்ந்து திருக்கழுக்குன்றம், திருநீர்மலை உள்ளிட்ட கோவில்களில் ரோப் கார் வசதி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.