திண்டுக்கல் : பழனி கோவிலில் வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நிலையில் பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக இரவு 10மணி முதல் காலை 5மணிவரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்துசய்யப்பட்டது. மேலும் இன்றுமுதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று பழனி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் இன்று பழனி கோவிலில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வெள்ளிக்கிழமையான இன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என நேற்று இரவு தாமதமாக அறிவித்ததால் கோவிலில் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.