மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி கதிரேசன் – மீனாட்சி. நடிகர் தனுஷ் எங்களின் மகன்தான் என்றும், அவர் மாதந்தோறும் பராமரிப்புத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தனுஷ் மீது இவ்வாறு அவர்கள் தொடர்ந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்நிலையில் தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயன்றதாகவும், நீதிமன்றங்களில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து உத்தரவு பெற்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்களைக் கூறி தனுஷுக்கும் கஸ்தூரி ராஜாவுக்கும் அந்தத் தம்பதியினர் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து தங்கள் வழக்கறிஞர் மூலம் கஸ்தூரி ராஜாவும், தனுஷும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் மன்னிப்புக் கோராவிட்டால் பத்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை தம்பதியர் தரப்பிலோ, “இதுவரை எந்த நோட்டீஸும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள்தான் அவர்களுக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” என்கிறார்கள்.
இதுபற்றி கஸ்தூரிராஜா தரப்பில் விசாரித்தால், “வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இதுகுறித்து இப்போது பேசுவது முறையாகாது” என்கிறார்கள்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.